DOWNLOAD OUR APP
CHAT WITH HEALTHGURU
Logo of REAN Foundation
HIPAA Compliant Badge
REAN Foundation Blog
A collage with text and a young woman practicing yoga at home.

சுய பராமரிப்பு: தம்மை தாமே கவனித்துக் கொள்ளும் கலை

May 17, 2021 6:56 am
REAN Team

சுய பாதுகாப்பு என்றால் என்ன? எளிமையான சொற்களில் கூற வேண்டுமானால் உங்கள் மனம், உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள நீங்கள் செய்யும் அனைத்தும் தான் சுய பாதுகாப்பு ஆகும். இதனை மேற்கொள்ள என கடினமான விதிகள் எதுவும் இல்லை. ஒரு நபரின் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் நல்ல உணர்வுகளை சாதகமாக பாதிக்கும் எந்தவொரு செயலும் சுய பாதுகாப்புக்கு உட்பட்டது ஆகும். மிகைப்படுத்தப்பட்ட உலகில் சமநிலையைக் கண்டறிதல், ஒருவரின் முன்னுரிமைகளை வரிசைப்படுத்துதல் மற்றும் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வது ஆகிய அனைத்தையுமே சுயபாதுகாப்பு என்று கூறலாம்.

அவ்வாறென்றால், சுய கவனிப்பில் ஈடுபடும் ஒருவர் சுயநலவாதி என்றாகிவிடுமா? இல்லை! மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மன பிரச்சினைகள் பெருகிய தற்போதைய சூழ்நிலையில், தனிப்பட்ட நல்வாழ்வு என்பது விலைமதிப்பற்ற உடைமை ஆகும். மேலும் அது சுய பாதுகாப்பினால் மட்டுமே சாத்தியமாகும்.

சுய பாதுகாப்புக்கான ஒரு அடிப்படை விதி: அது சுவாரஸ்யமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டுமே தவிர, அழிக்க கூடியதும் அடிமையாக்க கூடியதுமாக இருக்கக்கூடாது. மற்றும் அழிவுகரமானதாக இருக்கக்கூடாது. இது உங்கள் முழுநல்வாழ்விற்கு ஒத்துழைக்கவும், உங்களை சிறந்த ஒரு நபராக மாற்ற உதவும் ஒரு செயலாகவும் இருக்க வேண்டும்.

இதனை புரிந்துகொள்வது எளிதானது என்றாலும், “சுய பாதுகாப்பு" என்ற கோட்பாடு வேடிக்கையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களால் நிரம்பியுள்ளது. எங்கள் வலைப்பதிவு மிகவும் பொதுவான சில கட்டுக்கதைகளை கண்டறிந்து அவற்றின் பின்னால் உள்ள உண்மையை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறது.

சுய பாதுகாப்பு பற்றிய 5 கட்டுக்கதைகளை கண்டறிதல்/ 5 கட்டுக்கதைகள்:

  • கட்டுக்கதை 1: சுய பாதுகாப்பு என்பது ஒரு சுயநலம்
உண்மை: பலர் சுய பராமரிப்பையும் சுய நலத்தையும் ஒன்றாக கருதுகிறார்கள். மற்றவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டுமானால், உங்களை நீங்களே நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். “மீ- டைம்” என்பது ஒரு வழக்கமான சுகாதார சோதனை அல்லது ஒரு வழக்கமான பயிற்சியை போல முக்கியமானது. ஒருவரின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்யப்படும் நேரம், மற்றவர்களின் நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதில் முதலீடு செய்ய ஒருவர் பெறும் நேரத்திற்கு சமமாகும். எனவே, நம்முடைய மகிழ்ச்சியை முடிந்தவரை கவனித்துக்கொள்வது சுயநலவாதி என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், சுய பாதுகாப்பு “சுய-அன்பை” மேம்படுத்துகிறது, மற்றும் தேவையுள்ள மற்றவர்களுக்கு ஆதரவளிப்பதில் அல்லது உதவுவதில் முழுமையாக ஈடுபட நபரை தயார்படுத்துகிறது.
  • கட்டுக்கதை 2: சுய பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே
உண்மை: இது அனைவருக்கும் பொதுவானது தான். சுய பராமரிப்பில் பாலின சார்புடைய விதிகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நபரும் தனது நல்வாழ்வை தானே கவனித்தல் அவசியம். பெண்கள் சுய கவனிப்பில் அதிக நேரத்தையும் ஆர்வத்தையும் முதலீடு செய்கிறார்கள் என்ற உண்மை திரித்து இந்த கட்டுக்கதை தோன்றியிருக்கலாம். ஆனால் எந்த வகையிலும் ஆண்கள் அதிலிருந்து விலக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. அனைத்து சுய பாதுகாப்பு நடைமுறைகளும் இரு பாலினங்களுக்கும் எளிதில் பொருந்தும். இருப்பினும், பொதுவாகவே, ஆண்கள் தங்களை தாங்களே பராமரித்து கொள்ளுவதில் சற்று குறைவாகவே கவனம் செலுத்துகின்றனர். எனவே, அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • கட்டுக்கதை 3: சுய பாதுகாப்பு என்பதில் எந்த நன்மையும் இல்லை
உண்மை: சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் நீண்டகால நன்மைகளைக் கொண்டுள்ளன, அவை மேம்பட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தருகின்றன. பெரும்பாலான சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மன அழுத்த அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதய நோய்கள், அல்சைமர், புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பல மன மற்றும் உடல் நோய்களுக்குப் பின்னால் மன அழுத்தம் மிகப்பெரிய காரணியாக உள்ளது. சுய பாதுகாப்புக்காக நேரம் ஒதுக்குவது மன அழுத்த அளவைக் குறைக்கவும், தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், அமைதியை தந்து உதவுகிறது.
  • கட்டுக்கதை 4: சுய பாதுகாப்பிற்கு செலவு அதிகம்
உண்மை: இல்லவே இல்லை. சிலர், சுய பாதுகாப்பை ஆடம்பரமான ஸ்பாக்கள், விலையுயர்ந்த ஒர்க் அவுட் உபகரணங்கள் மற்றும் கவர்ச்சியான உணவு மற்றும் பூக்களின் படங்களுடன் இணைத்து பார்ப்பதால் இது மிகவும் பொதுவாக கருதப்படும் தவறான கருத்துக்களில் ஒன்றாகும். உண்மை என்னவென்றால் உண்மையான மகிழ்ச்சியை தர எதுவுமே ஒரு பொருட்டே அல்ல. சுய பாதுகாப்பு பயிற்சி செய்வது எளிது, மேலும் வீட்டில் கிடைப்பதைக் கொண்டே செய்ய முடியும். மொட்டை மாடியில் ஒரு எளிய நடை, ஒரு மணி நேர தோட்ட பராமரிப்பு, செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது, இசையைக் கேட்பது, கொஞ்சம் தியானம் செய்வது அல்லது நீண்ட நேர குளியல் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஆரோக்கியமான உறவைப் பெற முயற்சிப்பது கூட சுய பாதுகாப்புக்கான செயலாகும். சுய பாதுகாப்பு எளிமையானதாகவும், மலிவானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • கட்டுக்கதை 5: சுய பாதுகாப்பிற்கு அதிக நேரம் செலவாகும்
உண்மை: சுய பாதுகாப்புக்கு நிலையான அட்டவணை என்று எதுவும் இல்லை. இதை ஐந்து நிமிட தியானமாகவோ ஒரு மணி நேர யோகா அல்லது பைலேட்ஸ் அமர்வாகவோ புரிந்து கொள்ளலாம். சிலருக்கு, ஒரு கப் காபி அல்லது 45 நிமிட பெடிக்யூர் சில நிமிடங்கள் ஒரே மாதிரியான,அமைதியான விளைவைக் கொடுக்கும். இதற்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல, மாறாக ஒரு நபர் பெரும் மகிழ்ச்சியே இங்கு பேசப்படுகிறது.
  • கட்டுக்கதை 6: மனநல பிரச்சினைகளுக்கு சுய பாதுகாப்பு ஒரு தீர்வாகும்.

உண்மை: இல்லை, அது ஒரு சிகிச்சை அல்ல. சுய பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் தேர்வாகும், இருப்பினும் அதன் நல்ல விளைவுகளை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இது எந்த மனநோய்க்கும் தீர்வாகாது. ஒரு நடை பயிற்சியோ, ஓடு பயிற்சியோ மேற்கொள்வதன் மூலம் மனச்சோர்வை குணப்படுத்த முடியாது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சுய பாதுகாப்பு என்பது ஒரு மருத்துவ சிகிச்சை அல்ல.

இதையும் படிக்க: வயது & பதட்டம்: இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் சிகிச்சைகள்

உங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த எளிய வழிகள்:

உங்கள் சொந்த தேவைகளை கவனத்தில் கொள்வது நீங்களே உங்களுக்கு கொடுக்கும் பரிசு ஆகும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சுய பாதுகாப்புக்கான அடிப்படையாகும். நமது ஆரோக்கியத்தையும்In black fitness clothes, an elderly woman poses with the exercise balance ball மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த நாம் ஒரு சில விஷயங்களை மட்டுமே தினசரி செய்ய வேண்டும், மேலும் இந்த செயல்களுக்கு என எந்த தனிப்பட்ட செலவும் இல்லை. இதில் கடைபிடிக்க வேண்டியது அவற்றை அர்ப்பணிப்புடன் செய்து அவற்றை உங்கள் வழக்கமான ஒரு பகுதியாக மாற்றுவதாகும். கீழே அதுபற்றி உங்களுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்குகிறோம்.

ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது “நோ காட்ஜெட்” நேரத்தை உருவாக்கவும்:

தொழில்நுட்பம் நம் வாழ்வில் கிட்டத்தட்ட இன்றியமையாத தேவையாகிவிட்டது. இருப்பினும், ஒரு முறை கேஜெட்டுகள் மற்றும் சாதனங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. “கேஜெட் இல்லாத நேரத்தை” செயல்படுத்த சில எளிய உதவிக்குறிப்புகள் இங்கே: 1. தொலைபேசியில் அலாரத்தை அமைப்பதற்கு பதிலாக எளிய அலாரம் கடிகாரத்தைத் தேர்வுசெய்க. 2. படுக்கைக்கு செல்வதற்கு முன் உங்கள் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு புத்தகத்தைப் படியுங்கள். 3. கைப்பேசியில் செய்திகளைச் சரிபார்ப்பதைத் தவிர்த்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுங்கள்.

அதிகமான தண்ணீர் அருந்துங்கள்

நீர் என்பது வாழ்க்கையின் அத்தியாவசியமான இயற்கை மருந்தாகும். காலையில் எழுந்ததும் தண்ணீர் அருந்திவிட்டு நாளை தொடங்குவது நல்லது. இந்த தண்ணீரின் பயன்கள் உங்கள் உடலுக்குத் தேவையானது ஆகும். நம்மில் பலர் பசிக்கும் போது உணவை சாப்பிடாமல் தண்ணீர் அருந்துவோம், உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வயிற்றை உணவால் நிரப்புவோம். நீரேற்றம் என்பது காபி, தேநீர் மற்றும் சர்க்கரை, ஃபிஸி பானங்கள் ஆகியவற்றை அருந்துதல் என்று அர்த்தமல்ல. தூய்மையான, சுத்தமான நீர் நீரேற்றத்தின் சிறந்த வடிவம் ஆகும். தேங்காய் தண்ணீர் நல்ல ஒரு மாற்று ஆகும்.

உணவைத் தவறவிடாதீர்கள்:

உங்கள் உணவு உங்கள் உடம்பிற்கான எரிபொருள், அது இல்லாமல் மனமும் உடலும் ஒன்றிணைந்து செயல்பட முடியாது. சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வது உடலை சீராக, எச்சரிக்கையாக வைத்திருக்கும். தரமான உணவை சாப்பிட்டால் நல்லபடியாக உடல் உருமாறும். எப்பொழுது சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ எதை சாப்பிடுகிறோம் என்பதும் அவ்வளவு முக்கியம். எனவே நேரத்திற்கு நேரம் சரியாக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

வாய் விட்டு சிரியுங்கள்:

"சிரிப்பு ஒரு சிறந்த மருந்து" என்று கூறியவர் புத்திசாலி. இதயம் நிறைந்த சிரிப்பிற்கு ஈடு இணை மருந்து இல்லை,A group of people holding hands and laughing in an open space மேலும் இது நேர்மறையான சுகாதார விளைவுகளை உறுதிப்படுத்தும் ஒரு செயலாகும். சிரிப்பதினால் சோர்வு, பதட்டம், சோகம் மற்றும் சுய சந்தேகம் போன்ற உணர்வுகளில் இருந்து வெளிவர முடியும். சிரித்த முகமாக இருக்கும் போது நண்பர்கள் அதிகமாவார்கள். உங்கள் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது அவசியம் இருக்க வேண்டிய ஒரு டானிக் ஆகும். ஒரு நண்பருடன் ஒரு வேடிக்கையான உரையாடல் அல்லது நகைச்சுவை கலந்த பேச்சு இரண்டு அத்தியாயங்கள் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சிரிப்பு மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் அதிக முயற்சி இல்லாமல் மனதை அமைதிப்படுத்துகிறது.எனவே முடிந்த வரை வாய்விட்டு சிரிக்க வேண்டும்.

டிஜிட்டல் சகாப்தத்தில் சுய பாதுகாப்பு:

வாழ்க்கை முரண்பாடுகள் மூலம் நிறைந்துள்ளது. அவற்றுள் சுவாரஸ்யமான மற்றும் குழப்பமான சில முரண்பாடுகள் உள்ளன. அத்தகைய ஒரு புரிந்துகொள்ள முடியாத உறவு தொழில்நுட்பத்திற்கும் சுய பாதுகாப்புக்கும் இடையில் உள்ளது. கேஜெட் இல்லாத நேரங்களைப் பற்றி நாம் பேசும் போது, தொழில்நுட்பத்திலிருந்து நாம் விலகி இருக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில், நாம் நிதானமாகவும், சுய பராமரிப்பில் ஈடுபடுவதாகவும் மாற்றுவதில் தொழில்நுட்பத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

உதாரணமாக, சுகாதாரப் பயன்பாடுகள் உங்கள் உடல்நல அளவுருக்களைக் கண்காணிக்கும் திறனைக் கொடுக்கும், இதனால் ஒரு பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பு உங்களுக்குத் தெரிய வரும். வழிகாட்ட உங்களுக்கு உதவக்கூடிய அல்லது உங்கள் சுவாச பயிற்சிகளுக்கு காட்சிப்படுத்தல் வழங்கும் பல நினைவாற்றல் பயன்பாடுகள் தற்கால தொழில்நுட்பத்தில் உள்ளன. சிலருக்கு, ஒரு சுய பாதுகாப்பு வழக்கத்தை பின்பற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட் சாதனங்களில் வழக்கமான நினைவூட்டல்கள் ஒரு வழக்கமான வழியைக் கொண்டுவர உங்களுக்கு உதவக்கூடும், அல்லது இன்னும் சிறப்பாக, உங்கள் “மீ - டைம்” நினைவூட்டுகின்ற அந்த பயன்பாடுகளை எடுக்கவும்.

முடிவுரை: தொழில்நுட்பம் உண்மையில் இயல்பாகவே தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உதவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அவ்வப்போது இதனை செக்-இன் வைத்திருப்பது மிகவும் நல்லது.

சுய பாதுகாப்பு: சிறந்த உங்களுக்கான எளிய மாற்றங்கள

சுய பாதுகாப்பு என்பது வாய்மொழி அடிப்படையில் ஒப்பீட்டளவில் புதிய கருத்து ஆகும். எந்த நேரத்திலும், உலகெங்கிலும் உள்ள எவரும் அறியாமல் சுய பாதுகாப்பு நடைமுறைகளில் நாம் ஈடுபடலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலை சுய பராமரிப்பில் நனவான முயற்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தற்காலத்தில் மனநல கோளாறுகள் அதிகரித்து வருகின்றன, மனச்சோர்வு இப்போது பொதுவான காய்ச்சல் போல பெருகி விட்டது. கூடுதலாக, மன அழுத்தம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இத்தகைய துயரங்களைச் சேர்த்து, தொற்றுநோய் வாழ்க்கையை மென்மையாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. இதுபற்றிய உலகளாவிய சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்:

நான்கில் ஒருவருக்கு அவர்களின் வாழ்க்கையின் எதோ ஒரு கட்டத்தில் மன நோய்க்குள்ளாகின்ற வாய்ப்பு உள்ளது.

80% க்கும் மேற்பட்ட இளம் பருவத்தினர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை.

உலகம் முழுவதிலுமிருந்து 264 மில்லியன் மக்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

35% மக்கள் ஒரு நாளைக்கு பல முறை தொடர்ந்து மன அழுத்தத்தை உணர்கிறார்கள்.

எனவே நம்முடைய நல்வாழ்வை முடிந்தவரை எல்லா வழிகளிலும் கவனித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. எளிமையான செயல்கள் கூட நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நம் வாழ்வின் ஒரு பகுதியாக சுய கவனிப்பைத் தழுவுவதற்கான ஒரு நனவான முயற்சியைத் தொடங்குவோம்.

ரியான் அறக்கட்டளை: சுகாதார நிர்வாகத்தை எங்கள் தனித்துவமான வழியில் எளிதாக்குதல்

உங்கள் அன்புக்குரியவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை எளிமையான, பயனுள்ள, வசதியான மற்றும் மலிவு முறையில் நிர்வகிக்க ஒரு சிறந்த தளத்தை REAN அறக்கட்டளை உங்களுக்கு வழங்குகிறது. எங்கள் சுகாதாரத் தளம் பயனர்கள் தங்கள் மருத்துவ வரலாற்றை சுகாதார நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் வீடுகளின் வசதியிலிருந்து தரமான சுகாதாரத்தைப் பெறவும் அனுமதிக்கிறது

REAN அறக்கட்டளையுடன் உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கான உங்கள் சுகாதார விருப்பங்களை மறுவரையறை செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு, https://www.reanfoundation.org/ ஐப் பார்வையிடவும்.

No Comments
Share in

About The Author

REAN Team

Share a little biographical information to fill out your profile. This may be shown publicly.

Top
crosschevron-down